tamilnadu

img

கர்நாடகத்தில் 17 அமைச்சர்கள் பதவியேற்பு

பெங்களூரு,ஆக.20- குதிரை பேர அரசிய லால் கர்நாடகாவில் ஆட்சியைப் பிடித்துள்ள பாஜக முதல்வர் எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவை 25 நாட்களுக்குப் பிறகு செவ்வாயன்று விரி வாக்கம் செய்யப்பட்டது. 17 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.   இதற்கு முன்னர் கர்நாடகா வில் காங்கிரஸ் மற்றும் மதச்சார் பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சி  ளின் கூட்டணி அரசு ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. மதச்சார் பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி முதலமைச்சராக இருந்தார். காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் ‘அதிருப்தி’  எம்எல்ஏக்கள் பதவி விலகி யதை அடுத்து சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப் பில் குமாரசாமி அரசு கவிழ்ந்தது. இதையடுத்து மாநில பாஜக தலைவர் எடியூரப்பா முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார். ஆனால் அமைச் சர்கள் யாரும் பொறுப்பேற்க வில்லை. 

இந்நிலையில் ஆளுநர் மாளி கையில் ஆகஸ்ட் 20 செவ்வா யன்று காலை 10 மணிக்கு நடை பெற்ற நிகழ்ச்சியில் 17 அமைச் சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். கோவிந்த் மக்தப்பா கர ஜோல், அஸ்வத் நாராயண், லட்சு மண் சங்கப்பா சாவடி, ஈஸ்வ ரப்பா, அசோகா, ஜெகதீஷ் ஷெட்டர், ஸ்ரீராமுலு, சுரேஷ் குமார், சோமண்ணா, சி.டி.ரவி, பஸ்வராஜ் பொம்மை, கோட்டா ஸ்ரீனிவாஸ் பூஜாரி, மதுசுவாமி, சந்திரகாந்த் கவுடா, நாகேஷ், பிரபு சவுஹான், சசிகலா அன்னசாஹிப் ஆகியோருக்கு ஆளுநர் வஜுபாய் வாலா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதில் குமாரசாமி அரசின் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து பதவி விலகிய நாகேஷும் புதிய அமைச்சரவை யில் இடம் பெற்றுள்ளார். கர்நாடக அமைச்சரவையில் மொத்தம் 34 பேர் இடம்  பெறமுடி  யும். தற்போது முதல்வர் உட்பட 18 பேர் இடம் பெற்றுள்ள நிலை யில் 16 இடங்கள் காலியாக உள்ளன.